ஊரடங்கை மீறி கொழும்பில் நடந்த திருமணம்; நிறுத்திய பொலிஸார்!

மேல் மாகாணத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள போது திருமணங்கள், நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படாது என கூறப்பட்ட நிலையில் கொழும்பு ரமடா ஹோட்டலில் நடந்த திருமண நிகழ்வு நிறுத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

35 பேர் வரை குறித்த திருமணத்தில் கலந்து கொண்டாக கூறப்படும் நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ் அரசியல்வாதி ஒருவரின் மகனின் திருமணமே அவ்வாறு நடைபெற்றதாக முன்னர் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த அரசியல்வாதியின் மகன், “நீங்கள் எனது திருமணத்தைத் திட்டமிடும் போது தயவு செய்து எனக்கு முன்பே தெரியப்படுத்துங்கள், நான் தயாராகி வருவது எளிதாக இருக்கும்” என்று கேலியாக தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!