பிள்ளையானை அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு செல்ல அனுமதிப்பது தொடர்பில் கட்டளை!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் விளக்கமறியல் கைதியான நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொள்வதற்கு அனுமதி கோரும் வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் (02) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பிள்ளையான் பங்குபற்றுவது தொடர்பான நகர்த்தல் பத்திரம் கடந்த 20ம் திகதி தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான கட்டளை விசாரணை நீதிபதி ரீ.சூசைதாஸன் தலைமயில் இன்று நடைபெற்றது.

இதன்போது பிள்ளையானை சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதியினைப்பெற்று அதன்மூலம் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும் என நீதிமன்ற கட்டளையூடாக உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் நீதிமன்றத்தினை அணுகும்படி கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்தரனி ச.மங்களேஸ்வரி தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!