பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் கல்வியமைச்சரின் விசேட தீர்மானம்!

நாட்டில் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் இந்த வாரம் தீர்மானிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 09 ஆம் திகதி மூன்றாந்த தவணைக்காக பாடசாலைகளை திறப்பதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளின் திறப்பது தொடர்பில் தீர்மானிக்கும் போது மாணவர்களின் ஆரோக்கியம் குறித்து சிந்திக்க வேண்டும் என கல்வியமைச்சர் கூறியுள்ளார்.

ஆகவே நீண்ட கலந்துரையாடல்களின் பின்னரே இது தொடர்பில் இறுதித் தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும் என கல்வியமைச்சர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!