பிறந்த குழந்தையை கழிவறையில் அழுத்திக் கொன்ற இளம் தாய்!

வாலாஜாபாத் அருகே பச்சிளங்குழந்தையை இளம்பெண் கழிவறையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மாதா கோவில் பகுதியில் வசித்து வரும் ஆரோக்கியம் என்பவரின் மகள் குஷ்பு(24). இவர் வீட்டுக்கு தெரியாமல் ஒருவருடன் பழகி, கர்ப்பமாகி இருக்கிறார். ஆனால் அதனை வீட்டில் சொல்லாமல் வயிற்று வலி எனக்கூறி பெற்றோரை ஏமாற்றிக் கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று அவருக்கு பிரசவ வலி வரவே, ஏபிஜே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சுகப் பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது. இன்று காலை மருத்துவமனையின் கழிப்பறையை சுத்தம் செய்ய சென்ற மருத்துவர்கள், அதில் குழந்தையின் விரல்கள் தென்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர், மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை கழிப்பறையில் இருந்து வெளியே எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில், குழந்தை இறந்து ஒரு சில மணி நேரமே ஆகியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்து சிசிடிவி காட்சியை பரிசோதனை செய்ததில், குஷ்பு அவரது குழந்தையை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், குஷ்புவை கைது செய்துள்ளனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் தான், வீட்டுக்கு தெரியாமல் குழந்தை பிறந்ததாகவும் அதனை மறைக்க கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!