நான் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளராக இருந்தகாலப்பகுதியில் எனக்கு எவரும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளராக செயற்படும் மஹிந்த தேசப்பிரிய, எதிர்வரும் 12ம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும்,
“அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் எந்ததொரு பதவியையும் ஏற்கும் எண்ணம் எனக்கு கிடையாது. எனது ஓய்வு காலத்தில் அமைதியான பமுறையில் வாழுவதற்கு ஆசைப்படுகின்றேன்.
ஆனாலும், மாகாணசபைத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தமுடியாமல் போனது கவலை அளிக்கின்றது” – என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!