தனது பதவியிலிருந்து இன்று ஓய்வு பெறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தனது பதவியில் இருந்து இன்றுடன் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புதிய தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் வாரம் நியமிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக தெரிக்கப்பட்டுள்ளது.

19 ஆவது அரசிலயமைப்பு திருத்தத்தின் பிரகாரம் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.

இதற்கமைய மஹிந்த தேஷப்ரிய தலைமையில் மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கி தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இதேவேளை 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!