பளையில் ஒருவர் வெட்டிக் கொலை!

கிளிநொச்சி – பளை, தம்பகாமம் மாமுனை ஆற்றங்கரை காட்டுப் பகுதி வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர், இனம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி -பளை பகுதியில் அமைந்துள்ள பழக்கடை ஒன்றில் பழங்கள் வாங்கிக் கொண்டு தம்பகாமம் மாமுனை ஆற்றங்கரை காட்டு வீதியினூடாக மாமுனை நோக்கி பயணித்த வேளையே குறித்த நபர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்கான நபர் மாமுனை பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் குலசிங்கம் என்னும் 40 வயதுடைய நபர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!