ஜனவரி முதல் “1000 ரூபாய்” சம்பள உயர்வு வழங்கப்படும் – பிரதமர்

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 2021 ஜனவரி 1ம் திகதி முதல் 1000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (17) சற்றுமுன் தெரிவித்தார்.

2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையின் போது இதனை தெரிவித்துள்ளார்.

“2020 மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த வேதனம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்” என்று 2020 ஜனவரி 14ம் திகதி அரசு அறிவித்திருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!