அரியாலையில் தனிமைக்கு உள்ளாக்கப்பட்ட 62 பேருக்கு தொற்றில்லை!

அரியாலையில் சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 62 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

லண்டனுக்கு பயணம் செய்வதற்காக அரியாலையில் இருந்து கொழும்புக்கு கடந்த 9ம் திகதி சென்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒப்படைப்பதற்காக கடந்த 11ம் திகதி புதன்கிழமை பிசிஆர் பரிசோதனை செய்த போது, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அரியாலையில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் எதிர்மறையான அறிக்கை கிடைத்ததால் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!