கிளிநொச்சியிலும் மாவீரர் நாளுக்கு தடை!

கனகபுரம், முழங்காவில் மற்றும் தேராவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல்களை அனுஷ்டிக்க கூடாது என்று சி.சிறிதரன் எம்பி உள்ளிட்டோருக்கு கிளிநொச்சி நீதிமன்றம் இன்று (20) தடை விதித்துள்ளது.

கிளிநொச்சி அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவட்ட அலுவலகமான அறிவகத்திற்கு இன்று காலை சென்ற கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஏ.ஆர். 1679 /20 என்ற வழக்கின் பிரகாரம் 21ம் திகதி முதல் 27ம் திகதி வரையான நாட்களில் எந்தவிதமான அஞ்சலி நிகழ்வுகளையும் நடத்தக் கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளருக்கும் இன்று கிளிநொச்சி பொலிஸாரினால் நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!