காணாமல் ஆக்கப்பட்டோர் வழக்கில் ஜனாதிபதிக்கு விடுத்த அழைப்பாணை இரத்து!

மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுத்திருந்த அழைப்பாணையை மேன் முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்தது.

ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னர் கோத்தாபயவுக்கு யாழ் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.

குறித்த அழைப்பாணைக்கு முன்னர் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!