சாதாரண தரப்பரீட்சைகள் தொடர்பாக கல்வி அமைச்சர் விசேட அறிவிப்பு!

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகளை திட்டமிட்டவாறு நடாத்துவது குறித்து எதிர்வரும் 10 நாட்களில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2020ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!