10 பேருக்கு கொரோனா; அக்கரைப்பற்று முடக்கம்!

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி லதாகரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் 10 பேரும், சாய்ந்தமருதில் ஒருவரும் மட்டக்களப்பு – காத்தான்குடியில் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் அக்கரைப்பற்று சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்படுவதாக அவர் லதாகரன் அறிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!