பிரபாகரனுக்கு நாடாளுமன்றில் பிறந்தநாள் வாழ்த்து!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நாடாளுமன்றில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மகாவலி எல் வலயத்தின் கீழ் வடபகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறு சிங்கள அரசாங்கத்தினால் பாதிப்புக்கள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிந்துதான் தலைவர் பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்ததார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!