பேலியகொடை மீன் சந்தை செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை!

பேலியகொடை மீன் சந்தையின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பேலியகொடை மீன் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டம் கட்டமாக சுகாதாரத்துறையின் ஆலோசனையின் அடிப்படையில், மீன் சந்தை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன் சந்தையில் ஏற்பட்ட கொரோனா கொத்தணிப்பரவல் காரணமாக கடற்றொழில் சார்ந்த வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் அவர்களது கோரிக்கையினையடுத்து பேலியகொடை மீன் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகளை மீளவும் பகுதி பகுதியாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!