தானே தலைவர் என்று காட்ட முனைகிறார் சுமந்திரன்!

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலம்பெயர் ஆதரவாளர்கள் மத்தியில் தன்னை வீரராக காண்பிப்பதற்கான தேவை சுமந்திரனுக்கு ஏற்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

“ வடக்கிலுள்ள தமிழர்களின் ஒரே தலைவர் தான் என்பதை சர்வதேசத்திற்கு காண்பிக்கும் நோக்குடன் எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டு வருகிறார்.இதனால், சுமந்திரன் தற்போது பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.

வடக்கு தமிழர்களின் ஒரே பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிடையாது என்பதை, கடந்த தேர்தல்களில் வடக்கு மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

நாட்டில் சமாதானம், நல்லிணக்கம் ஆகியவற்றை எதிர்பார்க்கும், சிங்களம், தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இனத்தவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலை நிராகரிக்கின்றனர்.

தனி நாடொன்றை பெற்றுக்கொள்ளும் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டாலும், அவர்களின் எண்ணம் தொடர்ந்தும் அவ்வாறே காணப்படுகிறது. உலகிலுள்ள பலம் வாய்ந்த நாடுகளிலுள்ள சிலரின் ஒத்துழைப்புக்கள் இதற்கு உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!