இயக்கச்சியில் வெடிபொருட்களுடன் 4 பேர் கைது! – மூவர் பெண்கள்.

கிளிநொச்சி – பளை, இயக்கச்சி பகுதியில் வெடி பொருட்களுடன் மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இயக்கச்சி, பனிக்கையடி கிராமத்தில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் சில வெடிபொருட்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. இரகசிய தகவலையடுத்து குறித்த வீடு நேற்று இராணுவத்தினர் பொலிசார் மற்றும் புலனாய்வாளர்களால் சுற்றி வளைக்கப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல மணிநேர தேடுதலில் பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ன. கைது செய்யப்பட்டவர்கள் நாளை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!