உணவுப் பொதிகளுக்குப் பதிலாக 10 ஆயிரம் ரூபாவை அரசாங்கம் வழங்க வேண்டுமென சஜித் கோரிக்கை!

தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகளுக்குப் பதிலாக 10 ஆயிரம் ரூபாவை அரசாங்கம் வழங்க வேண்டுமென சஜித் பிரேமதாச கோரிக்கை முன்வைத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

அரசினால் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தொடர்பாக பொது மக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு இந்த கோரிக்கை முன்வைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், குறித்த உணவுப் பொதியில் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் இருப்பதாக கூறப்பட்டாலும் அதில், 7 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களே இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், இவ்வாறு அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும் கேள்வி எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!