அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாயிரம் பக்கங்களை உள்ளடக்கிய வகையில் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுமார் 198 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!