கிழக்கில் இரண்டாம் அலையில் 419 தொற்றாளர்கள்!

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை வரையில் கிடைக்கப்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனைகளில் 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டவர்களாக அக்கரைப்பற்றில் 12 பேரும் ஆலையடிவேம்பில் மூவரும் இனங்காணப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பகுதியில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 419 ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!