மஹர சிறைச்சாலை சம்பவம் : இதுவரை 228 பேரிடம் சாட்சிப்பதிவுகள் முன்னெடுப்பு!

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் இதுவரை 228 பேரிடம் சாட்சிப்பதிவுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலை அமைதியின்மை சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்படி சிறைச்சாலை அதிகாரிகள் 70 பேர் வைத்தியர்கள் 11 பேர் தாதியர்கள் 17 பேர் மற்றும் சிறைக்கைதிகள் 128 பேரிடம் இவ்வாறு சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவத்தில் உயிரிழந்தர்களுள் இதுவரை 8 பேரின் சடலங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!