இராணுவம் புனரமைத்த உப்புவயல் குளம் இராணுவத் தளபதியால் திறந்து வைப்பு!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டே தென்மேற்கு உப்புவயல் குளம் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவினால் இன்று (17) திறந்து வைக்கப்பட்டது.

யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் வழிகாட்டலில் தியாகி அறக்கொடை நிறுவனத்தினரின் நிதிப் பங்களிப்பில் வட்டுக்கோட்டை தென்மேற்கு உப்புவயல் குளம் புனரமைப்பு செய்யப்பட்டது.

நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர், வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர், வடக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!