விரிவடைகிறது மருதனார்மடம் சந்தை கொத்தணி!

?????????????????????????????????????????????????????????
யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் நேற்று மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூடத்தில், நேற்று 478 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இணுவிலை சேர்ந்த ஒருவர், மானிப்பாயை சேர்ந்த ஒருவர், சண்டிலிப்பாயை சேர்ந்த ஒருவர் என 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

முன்னதாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப்பீட ஆய்வுக்கூடத்தில் 110 பேருக்கு மேற்கொண்ட சோதனையில் சுன்னாகம் பொது சந்தையில் வியாபாரம் செய்யும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 2 பேருக்கு தொற்று உறுதியானது.

அதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், முல்லைத்தீவில் தனிமைப்படுத்தலில் உள்ள இருவருக்கும் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தைச் சேர்ந்த மூவருக்கும் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!