மனைவியுடன் சேர்ந்து வங்கி அதிகாரியை கொன்று துண்டு துண்டாக வெட்டி பெட்டியில் அடைத்த சக நண்பர்!

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் தனியார் வங்கி அதிகாரி ஒருவரை கொன்று 12 துண்டுகளாக வெட்டி நொறுக்கிய நிலையில் பெட்டி ஒன்றில் பொலிசார் கண்டெடுத்துள்ளனர். மராட்டிய மாநிலம் மும்பை மாநகரின் வொர்லி பகுதியை சேர்ந்த 31 வயது சுஷில்குமார் என்பவரின் சடலத்தையே பெட்டிக்குள் வெட்டி நொறுக்கிய நிலையில் ராய்காட் மாவட்டத்தில் நெரல் ரயில் நிலையம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் தற்போது சுஷில்குமாரின் நண்பரான சார்லஸ்(41) அவரது மனைவி சலோமி(31) ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதி நண்பர்களுடன் சுற்றுலா செல்வதாக கூறி குடியிருப்பில் இருந்து வெளியேறிய சுஷில்குமார், அடுத்த நாள் திரும்பி வருவதாகவும் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இரண்டு நாட்களாகியும் சுஷில்குமார் குடியிருப்புக்கு திரும்பாத நிலையில், தாயார் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், வங்கி சக ஊழியர்களுக்கும் சுஷில்குமார் சுற்றுலா சென்ற தகவல் தெரியவில்லை.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் நெரல் ரயில் நிலையம் அருகே துண்டுகளாக வெட்டி நொறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும், பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் மூலமே குற்றவாளிகளை கைது செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி பெட்டியை விற்ற கடையின் உரிமையாளர் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளார்.

சுஷில்குமாரும் சலோமியும் முன்னர் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

12 ஆம் திகதி சார்லஸின் குடியிருப்புக்கு சென்ற சுஷில்குமார் சலோமி தொடர்பில் இழிவாக பேசியுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த சார்லஸ், சுஷில்குமாரின் கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளார். தொடர்ந்து மனைவி சலோமியுடன் சேர்ந்து சடலத்தை 12 துண்டுகளாக துண்டித்து பெட்டிக்குள் வைத்து ரயில் நிலையத்தில் கைவிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!