முதியோர் இல்லத்தை தாக்கிய கொரோனா: 45 பேருக்கு தொற்று உறுதி!

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லமொன்றில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

98 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக முகத்துவாரம் பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த முதியோர் இல்லத்தில் அண்மையில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!