வலி.வடக்கு தவிசாளரின் வாகனம் மீது தாக்குதல்!

வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் பயணித்த வாகனம் மற்றும் அவரது சாரதி மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இளவாலை வசந்தபுரம் பகுதியில் நேற்று மாலை 6.40 மணிளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளவாலை சேந்தாங் குளம் பகுதியில் உள்ள வெள்ளவாய்க்கால் அமைக்கும் பணியினை பார்வையிட்டு விட்டு வீடு திரும்பும் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வலி. வடக்கு பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் சிறிய தகப்பனார் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் வலி. வடக்கு தவிசாளர் சுகிர்தனுடன் நேற்றுமுன்தினம் முரண்பட்டிருந்தனர். அத்துடன் தமது கட்சி தொலைக்காட்சியில் வலி.வடக்கு தவிசாளர் தமது அணியில் இணைந்துள்ளதாக போலி செய்தியை வெளியிட்டிருந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!