திருகோணமலையில் பாடசாலைகளை மூடுமாறு உத்தரவு!

திருகோணமலை கோட்ட பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் பணிப்புரை விடுத்துள்ளார். திருகோணமலை நகர்ப்பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் 15 பேர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மறு அறிவித்தல் வரை பாடசாலைகளை மூடுமாறு அனைத்து அதிபர்களுக்கும் அறிவிக்குமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!