நேற்றும் மூவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மூன்று பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 382 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.இதில், மருதனாமடம் சந்தைப் பகுதிக்கு சென்று வந்த கோப்பாய் மற்றும் ஊர்காவற்துறை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபருடன் தொடர்பிலிருந்த இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருமே தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!