வீடு திரும்ப தயாரான கண்ணதாசனுக்கு கொரோனா!- கந்தகாட்டுக்கு அனுப்பிவைப்பு.

புதிய மகசின் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பத் தயாரான நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தமிழ் அரசியல் கைதியான யாழ்.பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரை வீடு அனுப்புவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றிருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் கந்தகாடு கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

கண்ணதாசனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவரது வழக்கை மீள விசாரிக்கும் வகையில், அவரை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தது. எனினும் தொடர்ந்தும் மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!