என்டிஜன் சோதனை தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்ட விசேட தகவல்!

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் பயணிகள் தொடர்பில் 11 இடங்களில் மேற்கொள்ளப்படும் ரெப்பிட் என்டிஜன் சோதனை நடவடிக்கையில் இதுவரை கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 உயர்வடைந்துள்ளது.

இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் குறித்த சோதனை நடவடிக்கை டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் பயணிகள் தொடர்பில் 11 இடங்களில் மேற்கொள்ளப்படும் ரெப்பிட் என்டிஜன் சோதனை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!