இணுவிலில் இன்னொருவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் நேற்று 666 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் எண்ணிகை 110 ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!