மஹரசிறைச்சாலை விவகாரம்: கைதிகள் உயிரிழப்புக்கான காரணம் வெளியானது!

மஹரசிறைச்சாலை அமைதியின்மை சம்பவத்தில் உயிரிழந்துள்ள கைதிகள் 11 பேரும் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மஹர சிறைச்சாலையில் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மை சம்பவத்தில் கைதிகள் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் 8 பேரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை மஹரசிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை

அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

மஹரசிறைச்சாலையில் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பதற்காக நீதி அமைச்சரினால் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!