வெளிநாடுகளில் இருந்து மேலுமொரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 300 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதன்படி, கட்டார், பஹ்ரைன், தென் கொரியா மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் இருந்து அவர்கள் வருகை தந்துள்ளதாக, எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், கட்டாரிலில் இருந்து 45 பேரும், பஹ்ரைனிலிருந்து 67 பேரும், தென்கொரியாவில் இருந்து 95 பேரும், ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து 47 பேரும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்

இதன்படி, குறித்த நபர்கள் விமான நிலையத்திலேயே PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கையிலிருந்து 473 பயணிகள் இன்றையதினம் வெளிநாடு நோக்கிப் பயணித்துள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதன்படி, பஹ்ரைனுக்கு 175 பேரும், ஐக்கிய அரபு இராஜ்ஜித்தியத்திற்கு 45 பேரும், கட்டாரின் தோஹா நகருக்கு 71 பேரும் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!