யாழ். நோக்கி புறப்பட்ட பேருந்தில் இருவருக்கு தொற்று!

வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பேருந்தில் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் பயணிகள் நேற்றுமுன்தினம் இரவு அன்ரிஜன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது பஸ் நடத்துனரும் பயணி ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!