வடக்கில் நேற்று 32 புதிய தொற்றாளர்கள்!

வடக்கு மாகாணத்தில் நேற்று 32 பெருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 728 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 25 பேரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு மன்னாரில் இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!