பரிசுப் பொதிகளுக்குள் கஞ்சா!

மட்டக்களப்பு- ஓட்டுமாவடி பிரதேசத்தில் இருந்து ஆரையம்பதி பாலமுனை பகுதிக்கு முச்சக்கரவண்டியில் 7 கிலோ கிராம் கஞ்சா கடத்திய ஒருவரை மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் அரிசி மற்றும் பலசரக்கு பொருட்களுடன் பிஸ்கட் பெட்டிகளில் பரிசுப்பொருட்கள் போன்று கஞ்சா சூட்சகமாக பொதி செய்யப்பட்ட நிலையில் பொலிசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து முச்சக்கரவண்டி சாரதியை கைது செய்ததுடன் 7 கிலோ கஞ்சாவை மீட்டடுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!