சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு குடும்ப அங்கத்தவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் வாரத்தில் ஒரு நாள் மாத்திரம் கைதிகளை பார்வையிடுவதற்கு குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது வெளியில் இருந்து உணவு பொருட்கள் கொண்டு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் உடைகளை மாத்திரம் கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு வெளிநபர்களு
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!