பவித்ராவுக்கு தொற்று தீவிரம்! – ஐடிஎச்சிற்கு மாற்றப்பட்டார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அங்கொடவில் அமைந்துள்ள தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் ஹிக்கடுவவில் உள்ள ஒரு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை அவர் கொழும்பின் புறநகர் பொரலஸ்கமுவையில் அமைந்துள்ள சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அவருக்கு அதிகளவான கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதால், நேற்று மாலை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறெனினும் அவர் நன்றாக குணமடைந்து வருவதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!