குமாரபுரம் படுகொலையில் 25ம் ஆண்டு நினைவேந்தல்!

திருகோணமலை – கிளிவெட்டி குமாரபுரம் படுகொலையின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. 1996ம் ஆண்டு 13 பெண்கள், 12 வயதிற்குட்பட்ட ஏழு சிறுவர்கள் உட்பட 24 பேர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனை நினைவுகூரும் வகையில், அப்பகுதி மக்கள் அங்குள்ள ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவுத்தூபி அமையப்பெற்ற இடத்தில் உயிரிழந்தவர்களது உறவினர்கள் ஒன்றுகூடி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது இராணுவத்தினரின் அச்சுறுத்தல் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!