திருகோணமலையில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் முன்னெடுப்பு!

திருகோணமலை கடற்பிராந்தியத்தில் காணாமல் போன 7 பேரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 7 மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஏழு பேரும் கடந்த 26 ஆம் திகதி படகில் கடற்தொழிலுக்கு சென்றதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போதுவரையில் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை கிடைக்கப்பெறவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், காணமல் போன 7 மீனவர்களும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!