பாதாளகுழுக்களிற்கு எதிராக முப்படையினர்-இராஜாங்க அமைச்சர்

முப்படைகளின் உதவியுடன் பாதளஉலக குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபலாசிறிசேன தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்புசபையின் கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் தலைதூக்கியுள்ள பாதளஉலகத்தவர்களின் நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டுவந்து மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பிற்கு அதிகளவு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளோம் தொடர்ந்தும் அவ்வாறு செயற்படுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!