குறிகாட்டுவானில் இருந்து திரும்பிய மீனவர்கள் இருவர் மாயம்! – படகு நெடுந்தீவில் கரையொதுங்கியது.

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற் போயுள்ளனர் என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். குறிகாட்டுவானிலிருந்து நேற்று பிற்பகல் 1.45 மணிக்கு நெடுந்தீவுக்கு திரும்பிய மீனவர்கள் இருவரே இவ்வாறு காணாமற்போயுள்ளனர்.

நெடுந்தீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த மரியநாயகம் அமலன் மேயன் (வயது-20) நெடுந்தீவு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த ஞா. றொபின்சன் (வயது-40) ஆகிய இருவருமே காணாமற்போயுள்ளனர். அவர்களை தேடும் பணியை கடற்படையினர் முன்னெடுத்த போது படகு நெடுந்தீவு கரையில் மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!