கைதிக்கு கொரோனா – யாழ் சிறை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகளுக்கு தனிமை!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் ஆறு பேர் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள சந்தேக நபர்கள் எவரும் நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லப்படவில்லை. மேலும் தொற்று கண்டறியப்பட்ட சந்தேக நபருடன் தொடர்புடைய 4 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!