தடுப்பூசி பெற்றுக்கொண்டால் மாத்திரமே கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற முடியும்: இலங்கை மருத்துவ சங்கம்!

கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்வதன் மூலம் மாத்திரமே புதிய வகை கொரோனா வைரஸ் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு பெற முடியும் என, இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், புதிய வகை கொரோனா வைரஸானது, நாட்டில் ஏற்கனவே காணப்படும் வைரஸைப் போன்றதாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில், சமூகத்தின் மத்தியில் தொற்று பரவும் வேகம் அதிகரிப்பதுடன், பாதிப்பும் அதிக அளவில் காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், சுகாதார வழிகாட்டல்களை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டியது மக்களின் பொறுப்பாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுகாதார வழிகாட்டல்களை புறக்கணித்து செயற்பட்டதன் காரணமாகவே, அண்மைக் காலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து காணப்பட்டதாகவும், இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!