கூட்டமைப்புடன் போலிக் கூட்டில் சேர்க்க வேண்டாம்!

மோசமான துரோகத்தை தொடர்ந்தும் செய்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்போடு போலியான ஒற்றுமையை வலியுறுத்துவதுவது என்று பெயரில், நேர்மையாக பயணிக்க விரும்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்க்கும் அனுகுமுறையை முன்னெடுப்பதை இனியும் மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் நிறுத்த வேண்டும் என்று கட்சியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்றைய யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நீண்ட காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்று வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கடந்த தேர்தலின் போது சிறிய ஆட்டம் கண்டிருந்த நிலையிலும் கூட தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு அதன் தலைவர் சம்பந்தன் ஆதரித்து கையொப்பமிட்டு அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளார் என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!