ரஷ்யாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை கொடூரமாக கொன்ற தாயார்!

தன் மகன், தன் காதலன் தன்னை சந்திக்கவந்ததை தன் கணவனிடம் கூறியதால் ஆத்திரமடைந்த ஒரு பெண், அவனது வாயில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார். ரஷ்ய வங்கி ஒன்றில் காசாளராக பணிபுரிபவர் Anastasia Baulina (31). அவரது மகன் Andrey, Anastasiaவின் தற்போதைய கணவரான Pavel Baulin (35)இடம், அம்மாவைப் பார்க்க அவரது காதலர் வந்ததாக கூறியிருக்கிறான்.

அதனால் Pavelக்கும் Anastasiaவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்த Anastasia, பெட்ரோலை எடுத்து Andrey மீது ஊற்றிவிட்டு, அவனது வாய்க்குள்ளும் பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார்.

Andrey உடலில் தீப்பற்றி எரிய, தம்பி கதறித்துடிப்பதைக் கண்ட அவனது அக்காவான Natasha (12) பயந்து அலறிக்கொண்டே ஓட, Pavel வந்து தீயை அணைத்துள்ளார். ஆனால், Andreyயின் உடலின் பெரும்பகுதி எரிந்துவிட்டது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Andrey, இரண்டு நாட்களுக்குப்பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டான்.

இந்த கோர சம்பவத்தைத் தொடர்ந்து Anastasia கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!