யாழ்ப்பாணம் சந்தை மூடப்பட்டது!

யாழ்ப்பாணம் மாநகர மரக்கறி சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மரக்கறி, பழங்கள், உள்ளூர் உற்பத்திகள் மற்றும் வெற்றிலைக் கடைகள் அடங்கிய சந்தைப் பகுதி மாத்திரம் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் மாநகர மரக்கறி சந்தைத் தொகுதியில் எழுமாற்றாக 60 பேரிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்ட பரிசோதனை செய்த போது 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால் சந்தைத் தொகுதியின் அத்தனை வியாபாரிகளும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் ஆ.கேதீஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!