அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னோக்கி கொண்டு செல்ல கைகோர்க்குமாறு ஜனாதிபதி அழைப்பு!

அரசாங்கத்தின் கொள்கை மற்றும் அபிவிருத்தி திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்ல தம்முடன் வலுவாக கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை வெற்றிபெறச் செய்யும் கொள்கைகளுக்கு எதிராகவே இன்று எதிர்க்கட்சி சேறுபூசுவதாகவும் அதனால் அரசாங்கத்தின் திட்டங்களை உரிய முறையில் நிறைவேற்றி மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கிராமிய வேலைத்திட்டங்களுக்கு அரசியல் ரீதியாக மாத்திரமன்றி நிர்வாக ரீதியாகவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

அராங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டு செல்லும் போலியான பிரசாரங்களுக்கு பதிலளிக்கும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!