“இந்தியா ஆதரிக்கும் என்று நான் கூறவில்லை”!

ஜெனிவா விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என நான் ஒருபோதும் கூறவே இல்லை.நான் தெரிவித்த கருத்து தவறாக விளங்கி கொள்ளப்பட்டுவிட்டது. என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

“ இந்தியா எங்களுக்கு ஆதரவளிக்கும் என நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. நான் சொன்னது தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. நான் இந்திய பிரதமரின் வார்த்தைகளையே எதிரொலித்தேன். அவர் இந்தியா இலங்கைக்கு எந்த அநீதியும் இழைக்காது என குறிப்பிட்டிருந்தார். நான் அந்த வார்த்தைகளையே பயன்படுத்தினேன் .

ஆனால் சிங்கள மொழிபெயர்ப்பின்போது ஒரு பத்திரிகையாளர் நான் இந்தியா ஆதரவளிக்கும் என தெரிவித்ததாக கருதிவிட்டார். அது இலங்கையில் தலைப்புச்செய்தியாக மாறிவிட்டது இந்திய ஊடகங்களும் அதனை செய்தியாக்கின என அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!