புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை – ஆராய்கிறது கூட்டமைப்பு!

புலம்பெயர் அமைப்புகள் மீது அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஆராய்ந்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

7 புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும், 300 இற்கும் மேற்பட்ட தனி நபர்களுக்கும் தடை விதிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை இலங்கை அரசு வெளியிட்டுள்ளமை கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இந்த விடயம் குறித்து அறிந்துள்ளோம். இது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். இந்த அரசு ஆட்சிக்கு வந்தவுடன் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் என்பது தெரிந்த விடயமே. இது குறித்து விரைவில் எங்களின் நிலைப்பாட்டை அறிவிப்போம்” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!